நமது ஈமான் எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது . அது மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் சூழ்ந்துள்ளது . எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் (முஸ்லிம்) முஃமீன் மட்டுமே - ஈமானில் முழுமையடைகின்றாா் .வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் - அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகின்றது .
ஈமானிற்கு எழுபதிற்கும் அதிகமாக கிளைகள் உள்ளன . அதில் முதன்மையானது : "*லாயிலாஹ இல்லல்லாஹ்*
*[முஹம்மதுா் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதாகும்* . அதில் இறுதியானது - துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது . *வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும்* (நூல் - முஸ்லிம்).
*இதோ ஈமானின் கிளைகள் :*
*1) அல்லாஹ்வை நம்புவது.*
*2) இறைத்தூதர்களை நம்புவது.*
*3) மலக்குமார்களை நம்புவது.*
*4) திருக்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.*
*5) நன்மை , தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே என்ற விதியை நம்புவது.*
*6) உலக அழிவு நாளை நம்புவது.*
*7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.*
*8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு - ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.*
*9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.*
*10) அல்லாஹ்வை நேசிப்பது.*
*11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.*
*12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.*
*13) அல்லாஹ்வின் மீதே பொறுப்புச் சாட்டுவது.*
*14) முஹம்மதுா் ரஸூலுல்லஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது.*
*15) முஹம்மதுா் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப்படுத்துவது.*
*16) "இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல் !" எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது .*
*17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது .*
*18) கல்வியைப் பரப்புவது .*
*19) திருக்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது .*
*20) தூய்மையாக இருப்பது .*
*21) ஐவேளை - கடமையான - தொழுகைகளை நிறைவேற்றுவது .*
*22) ஜகாத் கொடுப்பது .*
*23) ரமழ்லான் மாதம் நோன்பு நோற்பது .*
*24) இஃதிகாஃப் இருப்பது .*
*25) ஹஜ் செய்வது .*
*26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது .*
*27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது , அதற்காக தயார் நிலையில் இருப்பது .*
*28) அறப்போரில் - எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது , புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது .*
*29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் - ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது .*
*30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது .*
*31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது . (1. கொலை , 2. லிஹார் , 3. ரமழ்லான் நோன்பின் போது தாம்பத்யத்தில் ஈடுபட்டுவிடுதல் போன்றவற்றின் பரிகாரங்கள்).*
*32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது .*
*33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது .*
*34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது .*
*35) அமானிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது .*
*36) கொலை செய்யாதிருப்பது .*
*37) கற்பைப் பேணுவது , தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.*
*38) திருடாதிருப்பது .*
*39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால் ,ஹராம் - பேணுவது .*
*40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண் , விளையாட்டுகளை விட்டும் தூரமாவது .*
*41) ஆண்கள் , பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது .*
*42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது , செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது .*
*43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது .*
*44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது .*
*45) அல்லாஹ்வுக்காகவே - மனத்தூய்மையுடன் - நல்லறங்கள் புரிவது .*
*46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது , தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது .*
*47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது .*
*48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ , உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது .*
*49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது .*
*50) (முஸ்லிம்)மூஃமீன்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது .*
*51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது .*
*52) நன்மையை ஏவி , தீமையைத் தடுப்பது .*
*53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது .*
*54) வெட்கப்படுவது .*
*55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது .*
*56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது .*
*57) நற்குணத்துடன் நடப்பது .*
*58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது .*
*59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது .*
*60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது , அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது .*
*61) (முஸ்லிம்)மூஃமீன்களை நேசிப்பது , அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது .*
*62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது .*
*63) நோயாளியை விசாரிப்பது .*
*64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது .*
*65) தும்மியவருக்கு - யர்ஹமுகுமுல்லாஹ் என - பதிலுரைப்பது .*
*66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது , அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது .*
*67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது .*
*68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது .*
*69) பிறரின் குறைகளை மறைப்பது .*
*70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது .*
*71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது , உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது .*
*72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது .*
*73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது .*
*74) அதிகமாக தர்மம் செய்வது .*
*75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது , பெரியவர்களை மதிப்பது .*
*76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது .*
*77) தனக்கு விரும்புவதை - தனது முஸ்லிம்(மூஃமீனான சகோதரனுக்கும் விரும்புவது .*
*78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது .*
*[ ஆதாரம் :*
*ஹதீஸ் கலை வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் "ஷுஃபுல் ஈமான்" என்ற நூல் .*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக