நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

ஆடை அணிந்தும் நிர்வாணம் அழிவு நாளின் அடையாளம்

அழிவு நாளின் அடையாளங்கள் யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும்(புகாரி 80, ஆடை அணிந்தும் நிர்வாணம் ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098 உயிரற்ற பொருட்கள் பேசுவது ‏விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது நூல்: அஹ்மத் 11365 பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்‎ ‏தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்வரை யுக முடிவு நாள் ஏற்படாது . நூல்: அஹ்மத் 1511 சாவதற்கு ஆசைப்படுதல் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது(புகாரி 7115, 7121) இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் ஏறத்தாழ முப்ப பொய்யர்கள தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது( புகாரி 3609, 7121) முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல் 'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.( புகாரி 3456) யூதர்களுடன் மாபெரும் யுத்தம் யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும் .( புகாரி 2926) கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல் கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'( புகாரி 5179) யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல் யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. (புகாரி 7119) கஹ்தான் இன மன்னரின் ஆட்சி (யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது (புகாரி 3517, 7117) செல்வம் பெருகும் செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது (புகாரி 1036, 1412, 7121) ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான்.( புகாரி 1424) மாபெரும் யுத்தம் இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள். ( புகாரி 3609, 7121, 6936) பைத்துல் முகத்தஸ் வெற்றி யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்! 1. எனது மரணம் 2. பைத்துல் முகத்தஸ் வெற்றி 3. கொத்து கொத்தாக மரணம் 4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு 5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள் 6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)க ளுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள்.புகாரி 3176 மதீனா தூய்மையடைதல் துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது (நூல் : முஸ்லிம் 2451) அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும(முஸ்லிம் 3546) மாபெரும் பத்து அடையாளங்கள் இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். 1 - புகை மூட்டம் 2 - தஜ்ஜால் 3 - (அதிசயப்) பிராணி 4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது 5 - ஈஸா (அலை) இறங்கி வருவது 6 - யஃஜுஜ், மஃஜுஜ் 7 - கிழக்கே ஒரு பூகம்பம் 8 - மேற்கே ஒரு பூகம்பம் 9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் 10 - ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல் ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது நூல்: முஸ்லிம் 5162. அல்லாஹ் நம் அனைவரையும் இந்த சோதனைகளிலிருந்து பாதுகாப்பானாக. ஆமீன்!

பிரபல்யமான பதிவுகள்