இஸ்லாம்
அரபு: ; al-'islām, என்பது ஒரிறைக் கொள்கையைகொண்ட ஒரு மார்க்கமாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர்ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிர்க்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது
இஸ்லாதின் நம்பிக்கை.
இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாதின் கட்டாயக் கடமைகளாகும்.
ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபிகள் இந்த மார்க்கத்தை மக்கா நகரில் பரப்பத்தொடங்கினார்கள். இவர் இறைவனின் தூதர் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாதின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்
1.
இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்
2.
சொல்-வேர்
இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இதுஇ-ஸ்-ல்-ம்என்ற நான்கு அரபிவேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிப்படுவது என்பதாகும்.
நம்பிக்கைகwள்
குர்ஆன்-இஸ்லாமிய வாழவியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை
இஸ்லாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விஷயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது
3
இது ஈமான் என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.
கடவுள்
“கடவுள் ஒருவனே. அவனே அல்லா. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இஸ்லாதின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லா என்ற அரபுச் சொல் பால்வேறுபாடுகாட்டாத ஒரு படர்க்கைச் சொல். இதன் மூலம் “இல்லா” எனப்படும் சொல் ஆகும். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.
4.
வானவர்கள்
வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல்
ஒரு இஸ்லாமிய கடமையாகும். இவர்களை இறைவன் ஒளியினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது
5. இறைவனை தொழுதவன்னம் இருப்பது, இறைதூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புன்னிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது.யிப்ரீல், இந்த வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார்கள்
வேதங்கள்
முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள்கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இஸ்லாமிய கடமையாகும்.தவ்ராத்,சபூர், இஞ்சில்,ஆகியவை முறையே மூசா,தாவூத், ஈசா,ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டது,
இன்னும் இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குர்ஆன் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைதூதர்கள் எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெர்வு செய்யப்பட்டவர்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் ஆதம் முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது
உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களில் கடமை . முகம்மது நபி. இவர்களில் இறுதியானவராக குர்ஆன் குறிப்பிடுகிறது.
இறுதித் தீர்ப்பு நாள்
ஒருநாள் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, முதல் மனிதன் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை மீக்கப்படுவர். அன்று அவர்கள் செய்த பாவ மற்றும் புன்னியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவது ஒரு கடமையாகும்.கியாமத் எனப்படும் இந்த நாளில் அவர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கமோ, நரகமோ தரப்படும் என குர்ஆன் குறிப்பிடுகின்றது.
விதி
விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என நம்புவது இஸ்லாதின் ஒரு கடமை. விதியை பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குர்ஆன் தடுக்கின்றது
நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
ஞாயிறு, பிப்ரவரி 09, 2014
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...