роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪெро╡்ро╡ாроп், рокிрок்ро░ро╡ро░ி 07, 2017

роЙрог்рооை рокேроЪுроо் роХுро░்роЖрой்,

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர் திகைத்த அதிசயங்கள்.....Dr. Gary Miller (Abdul-Ahad Omar))

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர்.

பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.

இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான்.

பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது ? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச்செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல.
குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது.

அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார்.

ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.

குர்ஆனைச் சற்று ஆழமாகப்படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்..?
ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா ? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)
என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து கேரி மில்லர் கூறுகிறார்...
இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.

உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.

டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்...

இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா ?

வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா ? (21:30)

1973 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்பநிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.

இணைந்திருத்தல் என்பதைக் குறிக்க ரத்க் எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். சிதறல் என்பதைக் குறித்த மூலத்தில் அல்ஃபதக் எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும்.

(ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் தான் சொல்லிக் கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர்.

டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது. (26:210,211) என்று கூறும் குர்ஆன்,
(நபியே) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக! (16:98) என்ற கடடளையிடுகின்றது.

❎ ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்

டாக்டர் கேரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 12  ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.

இந்த வசனம் இறங்கி 12 ஆண்டுகாலம் அபூலஹப்  உயிரோடு தான் வாழ்ந்து கொண்டிருந்தான் அப்படி அவன் வாழும்போது இவனுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மனதளவிலேனும் ஒரு துளிஇறை  நம்பிக்கை ( ஈமான் )  கூட அவனுக்கு அல்லாஹ் கொடுக்கவில்லை அப்படி கொடுத்து இருந்தால் அவனும் இஸ்லாத்தை தலுவியிருப்பான். அல்குர்ஆன் வசனமும் பொய்யாகி இருக்கும். அல்குர்ஆன் வசனங்களும் மாற்றப்பட்டு இருக்கும். எனவே இது நிச்சயமாக மனிதர்களைக் கொண்டு அல்லது முஹம்மத் நபி (ஸல்) அவர்களைக்கொண்டு உருவாக்கப்பட்டதே இல்லை நிச்சயமாக இது அல்லாஹ் ஒருவனால் தான் அருளப்பட்டது. என்பதனை உணர்ந்து இந்த Dr. Gary Miller (Abdul-Ahad Omar)) அவர்களும் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்.
அல்லாஹு அக்பர்.

அல்லாஹ் அவன் நாடியவர்களுக்கே கிருபை அருள் புரிவான்.
பார்த்தீர்களா ? அல்குர்ஆன் இல் பிழை கண்டுபிடிக்கச் சென்ற இவருக்கு அல்லாஹ் எப்படி அருள் புரிந்தான் என்பத.

உண்மையிலே இந்த வசனத்தைப் பற்றி இது வரைக்கும் எந்த ஒரு முஸ்லீம் கூட இப்படி ஆழ்ந்து சிந்தித்து இருக்க மாட்டார்கள். ஆனால் முஸ்லீம் அல்லாத மாற்று மதத்தவர்கள் தான் இவ்வளவு தூரம் அல்குர்ஆனை படிக்கின்றார்கள் அவற்றின் கருத்துக்களை பரிசோதனை செய்கின்றார்கள். சிந்திக்கின்றார்கள். நாம் முஸ்லீம்கள் வெறும் அல்குர்ஆன் ஓதுவதோடு மட்டும் இருக்கின்றோம். அவற்றில் உள்ளவைகளை சிந்திக்காமல். சில முஸ்லிம்களோ அல்குர்ஆன் தொட்டுப்பார்த்து வருடக்கணக்கு ஆகின்றது.
இன்ஷாஅல்லாஹ் இனியாவது நாங்கள் அல்குர்ஆன் ஓதுவோம் அவற்றில் அருளப்பட்டவைகளையும் சற்றி சிந்தித்து பார்ப்போம்.

தற்போது இஸ்லாமிய பிரச்சாரகராகவும், அழைப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிட அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில் குர்ஆன் அனைத்துமறிந்த நாயகனால் அருளப்பெற்றது..

மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்...!!

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்