முஸ்லிம் பெண்கள் மார்பகங்களின் அளவை பெருப்பித்துக் காட்டுகின்ற இறுக்கமான உடைகளை அணிகின்றமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
முஸ்லிம் பெண்கள் மார்பகங்களின் அளவை பெருப்பித்துக் காட்டுகின்ற இறுக்கமான உடைகளை அணிகின்றமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு அறிக்கை மூலம் கோரி உள்ளது.
இதன் அறிக்கை வருமாறு:-
தலைநகர் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் நடைபாதைகளிலும், மோட்டார் வண்டிகளிலும், பார்களிலும், பீச்சுகளிலும் எமது முஸ்லிம்களின் ஆடைகளை கண்டு வெட்கித் தலை குனிய வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் வந்திருக்கும். அதனை சொல்வதிலும் தடுப்பதிலும் பிற்போக்குத்தனத்தை கையாண்டு கொண்டிருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு அன்பான மடல்.
மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு என்று வெறுமனே அரசியல் பேசுவதற்காக அமைக்கப்பட்ட படையணி அல்ல இது. மாறாக பாவங்களை சொல்லால் அல்லது கையால் தடுப்பதற்காக முன்வந்த ஒரு படையணி என்பதை மீண்டும் தொட்டுச் செல்கிறோம்.
ஹபாயாக்கள் அணிவது இஸ்லாமிய கோட்பாட்டு உடைதானே? என்று விட்டு ஹபாயாக்களில் புதுவித டிசைன்களை தோற்றுவித்து அதனை அணியும் இன்றைய நவீன காலத்து முஸ்லிம் பெண்கள் தங்கள் அங்க அவயங்களை (மார்பகம், பின்பக்க மறைக்கப்படக்கூடிய பகுதி) ஆகியவை தெரியும் பொருட்டு இறுக்கமாக அணிந்கு இச்சையை தூண்டி விட்டு செல்கின்றமையை பார்க்க கூடியதாய் உள்ளது.
அது மாத்திரமின்றி உள்ளாடைகள் தெரியக் கூடிய வகையில் இறுக்கமாக அணியக் கூடியதனையும் பார்க்க கூடியதாய் உள்ளது. இது காட்டியும் காட்டாமலும் செல்வது போன்றதாகும்.
ஹபாயாக்கள் வாங்கும்போது அல்லது வாங்கிக் கொடுக்கும்போது மற்றவர்கள் தங்கள் மனைவியரை அல்லது பிள்ளைகளின் அங்க அவயங்களை பார்க்க வேண்டும் என்று உடை வாங்குகிறார்கள் என நினைக்க தூண்டுகிறது.
புதிதாய் ஹிஜாப் அணிகிற முறையினை பேசனாக கொண்டிருக்கும் இன்றைய இளம் பெண்கள் தலைமுடியினை மறைத்தால் போதும் என்று எண்ணியிருக்கிறார்கள் போல. மாறாக மார்பகங்களை
மறைக்க தேவையில்லை என்று நினைத்திருக்கிறார்கள் போல
மார்பககங்கள் தெரியப்படுத்துவது மாத்திரமின்றி இறுக்கமான டீசேர்ட்டுகள் அணிந்து மார்பின் அளவினையும் அந்நிய ஆண்களுக்கு காட்டும் அகோர நடவடிக்கைகளயும் எமது கண்ணால் பார்க்க கூடியதாய் உள்ளது.
லெக் இன்ஸ் என்று அணியும் புதுவித ஜீன்ஸ் வகைகளை வெளியில் உடுத்திக்கொண்டு தொடை மற்றும் கால்களை வேண்டுமென்றே இறுக்கமாய் காட்டி இச்சையைத் துாண்டுகிறார்கள்.
இவற்றை முஸ்லிம் பெண்கள் செய்கிறார்களா? அல்லது அவர்கள் கணவன்மார்கள் மற்றும் பெற்றெடுத்த தகப்பன்மார்கள் செய்யச் சொல்கிறார்களா? என்பதில் கேள்விக்குறி இருக்கிறது.
வெறுமனே ஊடகங்களுக்கு அறிவிக்கும் செய்தியல்ல இது. மாறாக தகுந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் செயற்பாட்டு ரீதியாக என்பது குறிப்பிடத்தக்கது. நிறுத்துங்கள் அல்லது நிறுத்தப்படும்.
முஸ்லிம்களின் மானங்களை காப்பாற்ற ஏனைய சமூகங்கள் பார்த்து கண்ணியப்படக் கூடிய ஒரு சமூகமாக மாற அனைவரும் ஒன்றிணையவேண்டும்
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ