ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் வானவர்கள் அவரிடம் மூன்று கேள்விகளைக் கேட்பார்கள். அவை
1. உன்னுடைய இறைவன் யார்?
2. உன்னுடைய மார்க்கம் எது?
3. உங்களுக்கு அனுப்பட்ட இறைத்தூதரான முஹம்மது நபியைப் பற்றி நீ என்ன கருதுகிறாய்? ஆகிய மூன்று கேள்விகளாகும்.
இதற்கு முஸ்லிம்------👇🏿
1. என்னுடைய இறைவன் அல்லாஹ்.
2. என்னுடைய மார்க்கம் இஸ்லாம்.
3. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று பதிலளிப்பார்.
அது உனக்கு எப்படி தெரியும்?
என்று வானவர்கள் கேட்பார்கள்.
நான் குர்ஆனை ஓதினேன்.
அதன் மூலம் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அவர்களை உண்மைபடுத்தினேன். என்று முஸ்லிமான அடியார் கூறுவார்.
காஃபிர்களால் பதிலளிக்க முடியாது. அவர்கள் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள்.
👆🏿நீண்ட ஹதீஸின் சுருக்கம் இது.
------------------------------------------
இதே செய்தி திர்மிதியில்
--------------------------------- 👇🏿
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர்.
ஒருவர் "முன்கர் மற்றொருவர் "நகீர். இந்த மனிதர் பற்றி
(முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர்.
அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை. நிச்சயமாக
முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார்.
உலகில் வாழும் போது இவ்வாறே
நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் என்று அம்மலக்குகள் பதிலளிப்பர். பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும்,
பின்பு அவரை நோக்கி "உறங்குவீராக! என்று கூறப்படும்.
"நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார்.
அதற்கு அவ்வானவர்கள் நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள்.
இறந்த மனிதன் முனாபிக்காக (நயவஞ்சகனாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது,
அம்மனிதன் இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.
அதற்கு அவ்வானவர்கள்
நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர்.
அதன் பின் பூமியை நோக்கி "இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும்.
அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் - திர்மிதீ : 991
-----------------------------------------
இதே செய்தி புகாரியில்
-------------------------------- 👇🏿
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான்.
அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து,
'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர்.
அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான்.
அவனிடம் நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார்.
நீ நல்லவனாக இருப்பதால் அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும்.
இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்...'
அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவன் நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால்
'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப்படும்போது
எனக்கொன்றும் தெரியாது.
மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான்.
உடனே
#நீ_அறிந்திருக்கவுமில்லை: குர்ஆனை ஓதி #விளங்கியதுமில்லை' என்று கூறப்படும்.
பிறகு இரும்பு சுத்திகளால் அவனது இரண்டு காதுகளுக்குமிடையே பிடரியில் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.
நூல் - புகாரி : 1374 / 1338
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக