நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, மார்ச் 30, 2024

ஒட்டகம் பற்றி அல்குர்ஆன்,

ஒட்டகம் பற்றி அல்குர்ஆன்

ஒட்டகம் பற்றி நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்:

100 லிட்டர் தண்ணீர் 10 நிமிடங்களில் குடிக்கும் உயிரினம்
பாலைவனத்தில் கடுமையான சூறாவளி வீசும் போது ஒட்டகத்தின் கண்களுக்குள் மண் போகாமல் இருக்க அது தன் கண்களை மூடிக்கொள்ளும்...

கண்கள் மூடப்பட்டிருந்தாலும் ஒட்டகத்தினால் பார்க்க இயலும்.. எப்படி என்று கேட்கிறீர்களா??

ஒட்டகத்திற்கு (Third eyelid) அதாவது மூன்றாவது கண்இமை என்ற‌ ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான்.

சூறாவளி வீசும் போது தன் கண்களின்  வெளிப்புறத்தே இருக்கும் இமைகளை மூடாமல் இந்த மூன்றாவது இமையை மூடிக்கொள்ளும்.

இந்த மூன்றாவது இமையை பொறுத்த வரை இது ஒளிபுகும் தன்மையை கொண்டது (Transparent) இந்த இமையின் மூலம் பாலைவனத்தில் கடுமையான சூறாவளி வீசும் போது ஒட்டகத்தின் கண்கள் மூடப்பட்டிருந்தாலும் ஒட்டகத்தினால் பார்க்க இயலும்.அதே நேரத்தில் கண்களுக்குள் மண் புகாமலும் இருக்கும்.

சுப்ஹானல்லாஹ்...

அல்லாஹ்வின் இந்த பிரம்மாண்டமான படைப்பை பற்றி சிந்திக்குமாறு திருமறை குர்ஆனில் நமக்கு கட்டளையிடுகின்றான்.

أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?

திருக்குர்ஆன்  88:17

இன்னும் இந்த ஒட்டகத்தின் படைப்பில் வியக்க வைக்கும் பல சான்றுகள் இருக்கின்றன...!

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்