நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஜூலை 31, 2019

முத்தலாக் ஆதரவு,எதிர்ப்பு,

முத்தலாக் மசோதா எப்படி நிறைவேறியது.. யாரெல்லாம் ஆதரவு, எதிர்ப்பு..
முத்தலாக் மசோதா எப்படி நிறைவேறியது.. யாரெல்லாம் ஆதரவு, எதிர்ப்பு..



முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களைவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

மசோதா நிறைவேற வேண்டும் என்றால் 121 எம்பிக்கள் பலம் வேண்டும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 110 எம்பிக்கள் பலம் இருக்கிறது. ஆனாலும் மசோதா நிறைவேறியது

இந்த மசோதாவிற்கு
திமுக,
காங்கிரஸ்,
திரிணாமுல் காங்கிரஸ்,
தெலுங்கு தேசம் கட்சி,
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி,
பகுஜன் சமாஜ்,
சமாஜ்வாதி,
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி,
அதிமுக
ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள்:

பாஜக
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள
ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதிமுக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு.

மசோதா நிறைவேற முக்கிய காரணம்
மசோதாவை எதிர்ப்பு தெரிவித்து பேசிய சில கட்சிகள் வாக்களிப்பின் போது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டது

எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வாக்களிக்காத கட்சிகள்:

தெலுங்கு தேசம் கட்சி

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

பகுஜன் சமாஜ்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி

அதிமுக

ஐக்கிய ஜனதா தளம் 

மொத்தம் வெளிநடப்பு  30
 
இதனால் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகள், எதிராக 84 வாக்குகள், வெளிநடப்பு 30 பேர் என்பதால் மசோதா நிறைவேறியது.

`மேலும்  இந்த மசோதா பின்வரும் அம்சங்களை கொண்டுள்ளது.`

ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என மூன்று முறை வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் போன்ற குறுந்தகவல் மூலமாகவோ கூறுவது சட்ட விரோதமாகும்.

முத்தலாக் சொல்லி விவாகரத்து கோரும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

இந்த முத்தலாக் தடை சட்டம் மூலம் மனைவி தனது கணவன் மீது புகார் கொடுக்கலாம்.

அல்லது அந்த பெண்ணின் ரத்த உறவினர்கள், திருமணம் மூலம் உண்டான உறவினர்கள் புகார்கள் கொடுக்கலாம்.
இந்த சட்டம் மூலம் குற்றம் நிருபிக்கப்பட்ட ஆண் 3 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்.

இந்த சட்டம் மூலம் பெயில் பெற முடியும். ஆனால் குற்றம்சாட்டிய பெண்ணின் அனுமதியுடன் மட்டுமே நீதிமன்றம் பெயில் வழங்க முடியும்.

இந்த சட்டம் மூலம் கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பேசி, தங்களுக்குள் சுமூகமான தீர்வை கொண்டு வந்து வழக்கை வாபஸ் செய்ய விரும்பினாலும் செய்யலாம்.

விவாகரத்து செய்த கணவனுடன் மீண்டும் பெண் சேர வேண்டும் என்றால் அந்த பெண் வேறு ஒருவரை மணமுடித்து பின் விவாகரத்து செய்திருக்க வேண்டும் என்று முறை ஒழிக்கப்படும்.

அதற்கு பதிலாக இந்த சட்டம் மூலம் சமாதானம் செய்து கணவனும் மனைவியும் ஒன்று சேரலாம்.

முத்தலாக் பெற்ற பெண் இந்த சட்டம் மூலம் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியும். அதனை நீதிமன்றம் நிர்ணயம் செய்யும்

மைனர் குழந்தைகளை பாதுகாக்கும் உரிமை இந்த சட்டம் மூலம் மனைவிக்கு வழங்கப்படும்.

குழந்தைக்கு உரிமை கோரும் உரிமை பெண்ணுக்கே வழங்கப்படும்.

வியாழன், ஜூலை 11, 2019

நபிகளாரின் உடலை தோண்டி எடுக்க முயற்சித்த கிறிஸ்தவர்கள்,

வரலாற்றில் ஒரு நாள்
நபிகளாரின் உடலை தோண்டி எடுக்க முயற்சித்த கிறிஸ்தவர்கள்

ஹிஜ்ரி 557 ம் ஆண்டு.அப்பாஸிய கிலாபத் பலஹீனமடைந்திருந்த காலக்கட்டம்.உலகில் கிருஸ்துவ பலம் ஓங்கிருந்தது.இன்றைய காலம் போலவே அன்றும் இஸ்லாமிய நாடுகள் பிரிந்துகிடந்தது.

அப்போது கிருஸ்துவர்கள்- மதீனாவுக்கு மேற்கத்தியர்களின் தோற்றத்தில் இரண்டு மனிதர்களை அனுப்பி வைத்தனர்.

இவர்களின் நோக்கம் பூமானின் உடலை தோண்டியெடுத்து அதை கிருஸ்துவர்களிடம் ஒப்படைப்பது.

அவ்விருவரும் பெருமானின் முபாரக்கான அறைக்கு அருகே தங்கினர்.  இவர்கள்  இறையச்சமுடையவராகவும்,சீர்திருத்தவாதிகளாகவும்,ஏழைகளுக்கு உதவி செய்பவர்களாகவும் தங்களை காட்டிக்கொள்வதுடன்,தவறாமல் ஜன்னதுல் பகீஃயான முஸ்லிம்களின் பொது கப்ருஸ்தானுக்கும்   பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்  அவர்களின் ரவ்லா ஷரீபுக்கும் ஸியாரத் செய்து வந்தனர்.

அதன் மூலம் தங்களின் திட்டத்தை நிறைவேற்ற நோட்டமிட்டனர்.

இவர்களின் வெளித்தோற்றத்தைப்பார்த்து மக்களும் இவர்களை நம்பினர்.
இவர்கள் தங்களின் திட்டத்தை செயல்படுத்தும் வேலையில் இறங்கினர்,இவர்கள் தங்கிருந்த வீட்டில் பெரும் குழிதோண்டி அதன்வழியாக  நாயகத்தின் ரவ்லாவை அடைய முயற்சித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகாலம் யாருக்கும் சந்தேகம் வராமல் தோண்டி-இறுதியில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்  அவர்களின் கப்ரை அடைந்து விட்டனர்.
இது ஒரு புறமிருக்க-

மறு பக்கத்தில்: சிரியாவில் இஸ்லாமிய அரசரான நூருத்தீன் சன்கி ரஹ்மத்துல்லாஹி  அவர்கள் தங்களின் கனவில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கண்டார்கள்.

அதில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இரு திருடர்களின் பக்கம் சுட்டிக்காட்டி இவர்களிடமிருந்து தன் உடலை பாதுகாக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

திடுக்கிட்டு விழித்த சுல்தான் அவர்கள்-
 
ஒழுச்செய்து,தொழுதுவிட்டு மீண்டும் தூங்கினார்கள்.அப்போதும் அதே கனவை கண்டார்கள்.இப்படி மூன்று தடவை கண்டு இக்கனவில் ஏதோ உண்மை இருப்பதாக அறிந்து தன் அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்களிடம் தான் கன்ட கனவை பற்றி கூறினார்கள்.

அதைக்கேட்ட அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்கள்-கலீபா அவர்களே!  மதீனாவில் ஏதோ ஆபத்து சூழ்ந்திருப்பதாக தெரிகிறது,எனவே தாங்கள் இரகசியபயணமாக யாரிடமும் கூறாமல் உடனடியாக மதீனா புறப்படுங்கள்.என்றார்.

இருபது நபர்களுடன் நிறையபொருள்களுடன் சுல்தான் மதீனா வந்து சேர்ந்தார். மஸ்ஜித் நபவியில் நுழைந்து,ரவ்லாஷரீபில் தொழுது விட்டு,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னாரின் அருமை தோழர்களான அபூபக்கர்,உமர் ரலியல்லாஹுத் தாஆலா அன்ஹு ஆகியோருக்கும் சலாம் உரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்கள்.

இப்போது என்ன செய்வது?
எப்படி அவ்விருவரை கண்டுபிடிப்பது?

எதுவும் தெரியவில்லை-அப்போது அமைச்சர் சுல்தானிடம்,கனவில் நீங்கள் கண்ட அவ்விருவரை நேரில் கண்டால் அடையாளம் கண்டு கொள்வீர்களா?என கேட்க-ஆம் என்று சுல்தான் பதில் கூறினார்.

உடனே, அரசர் தன்னுடன் நிறையபொருள்களை கொண்டுவந்துள்ளார் ஆகவே தாங்கள் வந்து அதை பெற்றுச்செல்லுங்கள் என மக்களுக்கு அமைச்சர் அறிவிப்புச்செய்தார்.

மக்கள் எல்லோரும் வந்தனர்,ஆனால் சுல்தான் எதிர்பார்த்த அவ்விருவர் வரவில்லை.

வேறுயாரும் மீதமிருக்கிறார்களா?என கேட்க,  மக்கள் இல்லை என்று கூறினர்.

நன்றாக யோசித்துச்சொல்லுங்கள் என சுல்தான் சொன்னபோது-மேற்குலகைச்சேர்ந்த இரு ஸாலிஹீன்கள் வரவில்லை.அவர்கள் யாரிடமும் எதுவும் தேவையாக மாட்டார்கள்
.என்றபோது,அரசர் சந்தோஷப்பட்டார்.

உடனே அவ்விருவரை தன்னிடம் அழைத்துவரும்படி உத்தரவிட்டார்.
அவ்விருவரும் வந்தபோது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் சுட்டிக்காட்டிய அதே இருவர்கள் தான்.

நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்?அரசர் கேட்டார்.

நாங்கள் மேற்குலக நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தோம்,பின்னர் மதீனாவந்த நாங்கள் இவ்வாண்டு முழுவதும் நாயகத்தின் அருகில் தங்கிவிடலாம் என்று முடிவு செய்து தங்குகிறோம்.என்றனர்.

இவர்கள் இருவரின் வீடு எங்கே இருக்கிறது?
என சுல்தான் அவர்கள் கேட்க மக்கள் அதைக்காட்டினர்,வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது-உள்ளே நிறைய பொருட்கள்,இரண்டு குர்ஆன்,நிறையநூட்கள் இருந்தன.

அங்கே ஒரு இடத்தில் பாய் விரிக்கப்பட்டிருந்தது,அதற்கு கீழே ஒரு பலகை போடப்பட்டிருந்தது.அந்த இடத்தில் சுல்தான் அவர்களுக்கு சந்தேகம் வரவே அதை எடுத்துப்பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
  
காரணம், பலகைக்கு கீழே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அறையின் பக்கமாக
ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
அதைக்கண்ட மக்களும் கடும் அதிர்ச்சியுற்றனர்.பின்னர் அவ்விருவரையும் கொண்டு வந்து கடுமையாக விசாரிக்கப்பட்டபோது-

தாங்கள் கிருஸ்துவர்கள் என்றும், மேற்கத்திய ஹாஜிகளுடன் தங்களை கிருஸ்துவர்கள் அதிகமான பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர் எனவும், முஹம்மதின் உடலை திருடி அங்கு கொண்டு செல்லவேண்டும் என தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூறினர்.

அதை செவியுற்ற சுல்தான் நூருத்தீன் அவர்கள் கடுமையாக அழுதார்கள்.

பின்னர் அவ்விருவரின் தலையை நாயகத்தின் அறைக்கு அருகே துண்டிக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

அவ்வாரே நிறைவேற்றப்பட்டது.

      பின்பு சுல்தானின் உத்தரவுக்கிணங்க-நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரவ்லாவை சுற்றி பள்ளமாக தோண்டி சுற்றிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றி ஒரு பாதுகாப்புச்சுவர் அமைத்தனர்.

அல்லாஹுத்தஆலா சுல்தான் நூருத்தீன் ரஹ்மத்துல்லாஹி அவர்களின் மண்ணரையை வெளிச்சமாக்கிவைப்பானாக,

அதே போல் இன்றும் யுதர்களின் கை பொம்மைகள் நபியின் உடலை இடம் மாற்றுவதற்கும் இடிப்பதற்கும் துடிக்கிறார்கள் நிச்சயம் அல்லாஹ் அவர்களை நாஷப்படுத்தி விடுவான்.

வெள்ளி, ஜூலை 05, 2019

பர்தா முறை,

பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்த்துவதேன்? May 4, 2011சகோதரர் ஆபூ இஸாரா Leave a comment மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்: கேள்வி எண்: 3 இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்? பதில்: இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு – உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். 1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு – போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு – மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன. A. பாபிலோனிய நாகரீகம்: பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது. B. கிரேக்க நாகரீகம்: பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி ‘பெருமைக்குரிய’ நாகரீக காலத்தில் – பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘பண்டோரா’ என்றழைக்கப்பட்ட ‘கற்பனைப் பெண்மணி’ யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் – ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள். கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்ட காலத்தில் பெண்கள் – உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் – ஆண்களுக்கு உரிய தான் என்ற அகம்பாவத்தாலும் – பாலியியல் பலாத்காரங்களுக்கும் – பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் – விபச்சாரம் பரவலாக காணப்பட்டது. C. ரோமானிய நாகரீகம்: ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் – பெண்களை நிர்வாணமாக பாhப்பதுவும் – ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது. D. எகிப்திய நாகரீகம்: எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் – சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள். E. இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்: அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு – அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள். 2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது. ஆண்களுக்குரிய ‘ஹிஜாப்’ வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் ‘ஹிஜாப்’ முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் ‘(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.‘ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் – வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் – அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது. பெண்களுக்குரிய ‘ஹிஜாப்’ அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் ‘(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்…………….ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது. 1)  ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்: நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் – கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம். இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் – ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமானவையே. 2) அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும். 3) அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது – உரத்த ஆடையாக இருக்க வேண்டும் 4) அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் – ஆண்கள் – பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும். 5) ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் – பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. 6) அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் – கருப்பு நிறம் – போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. 3. இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் – பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது. மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் – இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும். ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு – தனது கண்களிலும் – தனது உள்ளத்திலும் – தனது எண்ணத்திலும் – இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது – ஒருவர் நடக்கும் விதத்திலும் – அவர் பேசும் விதத்திலும் – அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும். 5.  ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது: பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன். பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் – அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் – ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. இரட்டை சகோதரிகள் – ஓர் உதாரணம்: இரட்டைப் பிறவியான சகோதரிகள் – இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் – மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் – கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் – தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. 7. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை. இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் – அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத – காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ – அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு – தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் – வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் – யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு – வல்லுறவு கொண்டு விட்டால் – மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் – வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ – அல்லது தாயோ வல்லறவு கொள்ளப்பட்டு – வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?. 8.மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது – பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் – பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் – பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் – மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை. மேற்கத்திய உலகம் – சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது – பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் – அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே – பெண்விடுதலை என்கிறார்கள். ‘கலை’ மற்றும் ‘கலாச்சாரம்’ என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள். 9. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் – அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு – 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் ‘தீவிரமாக’ வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். அமெரிக்காவில் இஸ்லாமிய ‘ஹிஜாப்’ முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் – அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி – மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் – அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் – அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?. 10. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும். இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் – ஐரோப்பாவாக இருக்கட்டும் – அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ – அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் – கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது. மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும் ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக் தமிழாக்கம்: அபூ இஸாரா

துல்கஃதா மாதம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க துல்கஃதா

குர்ஆனில் சரித்திரமும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அத்துடன் ஒரே சரித்திரமே கூட மீண்டும் மீண்டும் வேறு வேறு போங்கில் கூறப்படுகிறது. ஏனெனில் உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு வரலாறும் உருவாக ஆரம்பித்தது. எனவே, வரலாற்றுக்கலை என்பது உலகில் முக்கியத்துவம் வாய்ந்த கலை. வரவலாற்றின் மூலம் மனித அறிவு வளர்ச்சியடைகிறது. மனிதனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக பல படிப்பினைகளையும் உள்ளடக்கியிருக்கிறது, சரித்திரம். ஷவ்வால், துல்கஃதா ஆகிய இரண்டு மாதங்களுக்கு மத்தியில் உள்ள மாதம் துல்கஃதா. ஆனால், இந்த மாதம் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. எனினும், வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் பல இந்த மாதத்தில் நடந்துள்ளன. கஃபதுல்லாஹ்: ஹாஜிகள் கஃபதுல்லாஹ்வை நோக்கி லப்பைக் முழக்கத்துடன் விரைந்து செல்லும் காலமிது. ஆரம்பமாக ஆதம் (அலை) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கட்டினார்கள். பிறகு நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதைந்துவிட்ட பிறகு நபி இபுறாகீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் அதே இடத்தில் கஃபதுல்லாஹ்வைக் கட்டினார்கள். அவர்கள் கஃபதுல்லாஹ்வுக்கு அஸ்திவாரமிட்டது, துல்கஃதா ஐந்தாம் தேதியாகும். மீன் வயிற்றிலிருந்து விடுதலை: யூனுஸ் (அலை) அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் வேதனை வரும், என்று எச்சரித்திருந்தார்கள். வேதனை வரத் தாமதமானதால் ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள். ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென கப்பல் நின்று விட்டது. தம்முடைய எஜமானரிடமிருந்த அனுமியின்றி யாரோ இந்த கப்பலில் இருக்கிறார், என்று கப்பல் மாலுமி கூறினார். அச்சமயம் சீட்டு குலுக்கப்பட்டதில் யூனுஸ் (அலை) அவர்களுடைய பெயர் வந்தது. கடலுக்குள் இருந்த ஒரு மீன் அவர்களை விழுங்கி விட்டது. யூனுஸ் (அலை) அவர்கள் லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக இன்னீ குன்த்து மினள்ளாலிமீன், என்று ஓதினார்கள். கடைசியாக, குறிப்பிட்ட நாட்கள் மீன் வயிற்றில் இருந்த பிறகு அல்லாஹ் அவர்களை வெளியேற்றினான். அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நாள் துல்கஃதா பதினான்காம் தேதியாகும். அவர்கள் வெளியேற்றப்பட்ட சமயம் மிகவும் பலகீனமாக இருந்தார்கள். அவர்களின் பாதுகாப்புக்காக அல்லாஹ் துல்கஃதா மாதம் பதினேழாம் தேதி ஒரு சுரைக்காய் செடியை வளரச் செய்தான். மூஸா (அலை) அவர்களின் நோன்பு: பிர்அவ்ன் அழிக்கப்பட்ட பிறகு பனூஇஸ்ரவேலர்களுக்கு ஹலால், ஹராமை விளக்கி வைக்கும் ஒரு வேதத்தை வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்திருந்தான். எனவே, பிர்அவ்ன் மூழ்கி அழிந்த பிறகு மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் வேதத்தை வழங்குமாறு வேண்டினார்கள். அப்போது அல்லாஹ் மூஸா (அலை) அவர்களை முப்பது நாட்கள் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டான். அந்த மாதம் துல்கஃதா மாதமாகும். (நூல்: இஸ்லாமீ மஹினோங்கே ஃபஸாயிலோ அஹ்காம்) ஹிஜ்ரி - 5: இந்த ஆணடின் துல்கஃதா மாதத்தில் தான் (மார்ச் - 627) பர்தாவுடைய சட்டம் இறங்கியது. கந்தக் யுத்தம் துல்கஃதா எட்டாம் தேதி (மார்ச் - 31, 627) நடந்தது. ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டதும் இநத மாதத்தில் தான். ஹிஜ்ரி - 6: இந்த ஆண்டின் துல்கஃதா மாதத்தில் (மார்ச் - 628) உம்ரா செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் மக்காவுக்கு புறப்பட்டார்கள். எனினும் மக்காவாசிகள் முஸ்லிம்களை வரவிடாமல் ஹுதைபியா என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வருவது தாமதமானதால் உஸ்மான் (ரலி) கொலை செய்யப்பட்டுவிட்டார்கள், என்ற வதந்தி பரவியது. உடனே, எல்லா நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் கையில், சாகும் வரை போராடுவோம், என்று ஒப்பந்தம் செய்து கொண்ட வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பைஅதுர் ரிள்வான் என்ற உடன்படிக்கை நடந்ததும் இநத மாதத்தில் தான். இந்த ஒப்பந்தம் செய்து கொண்டவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக குர்ஆன் வசனம் இறங்கியது. கடைசியாக மக்கா காஃபிர்களே இறங்கி வந்து முஸ்லிம்களிடம் செய்து ஹுதைபியா உடன்படிக்கையை தெளிவான வெற்றி - மாபெரும் வெற்றி என்று குர்ஆன் வர்ணிக்கிறது. போர்க்காலத்தில் படையை இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு ரக்அத்தாக (வித்தியாசமான முறையில்) தொழும் தொழுகை போர்த்தொழுகை. இந்த போர்க்காலத் தொழுகையின் சட்டம் இறங்கியதும், முதன் முதலாக அமுல்படுத்தப் பட்டதும் இந்த மாதததில் தான். இந்த ஆண்டு துல்கஃதா முதல் தேதி (13, மார்ச் - 628) முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களை திருமணம் முடிப்பது தடைசெய்யப்பட்டது. ஹிஜ்ரி - 7: மக்காவாசிகள் ஏற்படுத்திய தடையின் காரணமாக கடந்த வருடம் செய்ய முடியாத உம்ராவை நிறைவேற்றுவதற்காக ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு துல்கஃதா 1- ம் தேதி (மார்ச் - 629) மக்காவுக்கு புறப்பட்டார்கள். இதே மாதத்தில் தான், மைமூனா (ரலி) அவர்களை அவர்களை நபி (ஸல்) திருமணம் முடித்துக் கொண்டார்கள். நபியவர்கள் செய்த கடைசி திருமணம் இதுதான். ஹிஜ்ரி - 8: இந்த ஆண்டின் துல்கஃதா வில் கைஸ்பின் ஸஃத் (ரலி) அவர்களின் தலைமையில் 400 பேர் கொண்ட சிறுபடையை ஸுதா என்ற கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் துல்கஃதா பதினெட்டாம் தேதி (9, மார்ச் - 630) நேரடியாக நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். .இதே மாதத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சிறு படையை யமன் தேசத்திலுள்ள ஹம்தான் என்ற பிரிவினரிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களும் ஆறு மாதமாக இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்தார்கள். எனினும், அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு அலீ (ரலி) அவர்களை சில தோழர்களோடு அங்கு அனுப்பி வைத்தார்கள். அலீ (ரலி) அவர்களுடைய கரத்தில் அவர்கள் அனைவருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இதே மாதம் 18 ஆம் இரவு (9, மார்ச் - 630) நபி (ஸல்) அவர்கள் ஜியிர்ரானா என்ற இடத்திலிருந்து உம்ராவுக்குப் புறப்பட்டார்கள். ஹிஜ்ரி - 9: இந்த ஆண்டு துல்கஃதா மாதம் (பிப்ரவரி - 631) அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இது, ஒரு கருத்தின்படி ஹஜ் கடமையாக்கப் பட்ட பிறகு முஸ்லிம்கள் செய்யும் முதல் ஹஜ்ஜாகும். ஹிஜ்ரி - 10: இந்த ஆணடு துல்கஃதா மாதம் 25 ஆம் தி (22. பிப்ரவரி - 632) நபி (ஸல்) அவர்கள் மதீனாவலிருந்து ஹஜ்ஜத்துல் விதாவுக்காக புறப்பட்டார்கள். இந்த துல்கஃதா மாதத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பல நபித்தோழர்களும் நல்லவர்களும் உலகை விட்டும் பிரிந்திருக்கிறார்கள். அபூதர் கிஃப்பாரி (ரலி) (ஹிஜ்ரி- 32; ஜூன் - 653) அபூஹுரைரா (ரலி) (ஹிஜ்ரி- 57; செப்டம்பர் - 677) பர்ரா இப்னு ஆஜிப் (ரலி), (ஹிஜ்ரி- 72; மார்ச் - 792) அலா இப்னுல் ஹள்ரமீ (ரலி) (ஹிஜ்ரி- 21; அக்டோபர் - 642)  கப்பாப் பின் அரத் (ரலி) (ஹிஜ்ரி- 37; ஏப்ரல் - 658) போன்ற நபித்தோழர்களும் இமாம் தாரமீ (ரஹ்) (ஹிஜ்ரி- 255; அக்டோபர் - 869) இமாம் தாரகுத்னீ (ரஹ்) (ஹிஜ்ரி- 485; அக்டோபர் - 995) போன்ற இமாம்களும் துல்கஃதா மாதத்தில் வஃபாத்தானார்கள். மொகலாயப் பேரரசின் மிகச் சிறந்த ஆட்சியாளர் ஔரங்கசேப் (ரஹ்) அவர்களும் இம்மாதத்தில் (28, 1118; கி.பி. பிப்ரவரி - 1707) மரணித்தார்கள். விடுதலைப் போராட்டம்: வங்கதேசத்தில் ஆங்கிலேயனுக்கு எதிராகப் போராடிய ஸிராஜுத்தௌலாவும் (ஹிஜ்ரி - 1170; கி.பி. ஜூலை - 1757) தென்னிந்தியாவில் ஆங்கிலேயனுக்கு எதிராகப் போராடிய திப்பு சுல்தானும் இம்மாதத்தில் (ஹிஜ்ரி - 1213; கி.பி. ஏப்ரல் - 1799) ஷஹிதாக்கப் பட்டார்கள். ஆங்கிலேயனுக்கு எதிராகப் போராடிய மாபெரும் மார்க்க ரோஷமுள்ள தியாகி ஷாஹ் இஸ்மாயீல் ஷஹித், சைய்யித் அஹ்மத் ஷஹித் ஆகியோர் இம்மாதத்தில் தான் (ஹிஜ்ரி - 1246; கி.பி. - மே, 1881) ஷஹிதாக்கப் பட்டார்கள். ஆதார நூற்கள்: இஸ்லாமீ மஹினோங்கே ஃபாளாயிலோ அஹ்காம், அஹ்தெ நுபுவ்வத் கே மாஹொஸால்)

செவ்வாய், ஜூலை 02, 2019

இமாமின் கவலை,

இமாம்களின் ஆலிம்களின் மனக்கவலையை நீங்களே கொஞ்சம் படித்துப் பாருங்களேன்

ஆக பல வருடங்கள் பணியில் இருந்தாலும் இமாம்கள் பணியிலிருந்து நீக்கப்பட அந்த  நிர்வாகத்திற்கு நியாயமான காரணம் எதுவும் தேவையில்லை என்பதே சமூகத்தின் பார்வையில் இமாம்களின் அந்தஸ்து என்ன ..? என்பதை  வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது ....

*பார்வைக் கோளாறு.....*

நம் கண்களால் நாம் பிறரை பார்க்கிறோம் ... ஆனால் பிறரின் பல கண்கள் நம்மை பல்வேறு விதமாக உற்று நோக்குகின்றது என்பதற்கு சமூகம் ஆலீம்களை பார்க்கும் பார்வைகளே அதற்கு சான்று ....

ஓர் ஆலிம் தன் கண்களால் மஹல்லா மக்களை ஒரே பார்வையோடு பார்க்கிறார் .. ஆனால் அந்த மஹல்லா மக்களின் பார்வைகளோ அந்த ஆலிமை பல் வேறு பார்வைகளோடும் , பல்வேறு விமர்சனங்களோடும் எப்படியெல்லாம் பார்க்கிறது ....? இதோ கேளுங்கள் ....!

*பார்வை 1 :* "என்னப்பா அப்துல்காதரு நம்ம ஊருல புதுசா ஒரு ஆலீம் வந்திருக்காரே ....அவர் யாரிடமும் பேச மாட்டார் போலே"... ?
"நாளு நபர்களிடம் பேசினா தானே நாளு பேர் பள்ளிக்கு வருவாங்க... இந்த நாலேஜ் கூட தெரியாத இமாமா இருக்காருப்பா அவரு"...

*பார்வை 2 :* "என்னப்பா ராவுத்தர் இமாம்னா இமாம் மாறி இருக்க வேணாமா ?
யாரை பார்த்தாலும் நம்ம இமாம் அரட்டை அடிச்சுகிட்டே இருக்காரே..."

*பார்வை 3:* "என்னப்பா பீர் முஹம்மது ... நம்ம இமாம் பேப்பர் செய்தியோ அல்லது  டீவி செய்தியவோ பார்க்கவே மாட்டார் போலே"... ?
"எப்ப பார்த்தாலும் தொழுகை நோன்பு மறுமைன்னே பேசீட்டு இருக்காரு .. காலத்துக்கு தகுந்த மாறி பேச வேணாமா"... ?

*பார்வை 4:* "ஏம்பா ராவுத்தரு நம்ம இமாம் இமாமுக்கு படிச்சாரா இல்லை வேற ஏதாவது படிச்சாரா"... ?
"எப்ப பேசினாலும் உலகத்தை தொட்டு பேசாமே போகவே மாட்டேன்குறாரே... தக்வாவை எப்பவுமே சொல்லனுமா இல்லையா"...  ?

*பார்வை 5:* "ஏன் தொப்பியும் வெள்ளை ஜிப்பாவும் போட்டாதான் இமாமா? நம்மளை போல டிரஸ் போட்டா இமாம் இல்லேன்னு ஆயிருமா"... !

*பார்வை 6:* "அடச்சே இவர் இமாமா.. ?
இல்லே வேற ஏதாவதுமா.." ?
ஒரே மாடல் மாடலா டிரஸ் போட்டே சுத்துறாரே..."

*பார்வை 7:* "இமாம்களை குறை சொல்லியும் பலன் இல்லை...
ஏனா என்னதான் இமாமா இருந்தாலும் அவரும் மனிதர் தானே? சின்ன சின்ன விசயத்தை எல்லாம் பெருசாக்க கூடாது மாப்பிள்ளை புரியுதா "...?

*பார்வை 8:* "கொஞ்சமாவது சிந்திச்சு பாரு பாரூகு"....
நம்மளுக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் வேணாமா"...?
இமாம்னா அதுக்குன்னு சில தகுதிகள் இருக்கா இல்லையா..." ?
"இவங்களெல்லாம் என்னத்த மதராஸாவில  ஒதினாங்களோ... அல்லாஹ் ! அல்லாஹ்...!

இப்படி இமாம்கள் மீதான சமூக பார்வைகள் பலவிதம்...
ஆலிம்களின் உலகம் எவ்வளவு மன அழுத்தத்திற்குறியது , எத்தனை போராட்டத்திற்கு மத்தியில் அவர்களின் வாழ்க்கை கழிகிறது என்பது புரிகிறதா...?

நின்றாலும் குற்றம்... படுத்தாலும் குற்றம்... சிரித்தாலும் குற்றம்.... அழுதாலும் குற்றம் ....

*இமாமாக பணியாற்றும் ஓர் ஆலிமின் வாழ்க்கைப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் அதில் அவர் வாழ்ந்த பக்கங்கள் வாசம் மிகுந்தவை அல்ல ... வலிகளும் நிறைந்தவை என்பதே உண்மை ...*

அவரின் வாழ்க்கை போராட்டத்தில்
பாசமுள்ள உறவுகள் சில...
வேசமுள்ள நெஞ்சங்கள் பல....
ஓர் மஹல்லாவில் இமாமை
தூற்றும் ஆயிரம் பேரிருக்க...
போற்ற ஒரு சிலர்தானுண்டு!
கஷ்டத்தில் கைகழுவ ஆயிரம் பேரிருக்க ...
கைகொடுக்க ஒரு சிலர்தானுண்டு!

இமாமை
பார்க்கும் போது பவ்யமாய் கைகுலுக்குபவர்கள்
தள்ளி நின்று கை நீட்டி குறை கூறியதும் உண்டு ...

*குலுக்கும் கைகளுக்குள் பொய் குலுங்கிக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளாத அப்பாவி இமாம்களும் உண்டு...*

சிலருக்கு வாழ்க்கையில் போராட்டம் உண்டு .. ஆனால் வாழ்க்கையே போராட்டமாய் இருப்பது இமாம்களின் வாழ்க்கைதான் ...
எப்படி என்கிறீர்களா ...?
அடுத்த பதிவில் கூறுகிறேன் இன்ஷா அல்லாஹ்...

*செய்யது அஹமது அலி . பாகவி*

பிரபல்யமான பதிவுகள்